Posted by Mubaarak in Personal.
Tags: birthday, naseera
என் மேலான அன்பிற்குரிய மகளுக்கு,
அன்பான பிறந்த நாள் வாழ்த்துக்கள்
(23-November-2007)

காலங்காலமாய் தொழுதிருந்தும்
கண்கலங்கி கரைந்திருந்தும்
நெஞ்சமெனும் நிலத்தினிலே
நெற்றிதேய வீழ்ந்திருந்தும்
கடவுளவன்
கண்முன்னே வந்ததில்லை
கருணைகொண்டு தொட்டதில்லை
என் குரலும் கேட்டதில்லை
வாரித்தழுவி அணைத்ததில்லை
நீ எங்கள் மகளாய்
பிறந்திட்ட பொழுதினில்
கடவுளவன் கருணையினை
கண்டதாய் எண்ணிட்டேன்
களிப்புமிக கொண்டிட்டேன்
உள்ளத்தில் ஊறவைத்த
ஓராயிரம் கோடி வார்த்தைகளில்
உனக்கெனவே தான்அவனை
அனுதினமும் பிரார்த்தித்தேன்
திருமகளே உனைப்பிரிந்து
கணந்தோறும் அழுகின்றேன்
கண்ணீராய் வழிகின்றேன்
உன் உயர்வான
நல் வாழ்வுக்கெனவேதான்
உனைவிட்டு வாழ்கின்றேன்
உயிர் கரைந்து நிற்கின்றேன்
பிரியங்களுடன்….முபாரக்
*************************